பாமரன் கேள்விகள்

மதியம் உணவு அருந்தும் போது செய்திகள் பார்பது என் வழக்கம். இன்று அவ்வாறு நான் கண்ட செய்தி ரொம்ப கொடுமை சார்,சேலத்தில் அரசு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து ஒரு தனி மனிதனால் கடத்தப்பட்டு பின்பு காவல் துறையின் பயங்கர முயற்ச்சிக்கு பின் மீட்கப்பட்டிருக்கிறது, ( நம்புங்க சார் நம்ம காவல் துறைதான் அட நிஜமா தாங்க.. )ஒரு தனி மனிதனால் ஒரு அரசு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தை கடத்த முடிகிறது தங்க தமிழ் நாட்டில் என்றால், தனி மனித பாதுகாப்பிற்கே அர்த்தம் இல்லாமல் போகிறது, பேருந்து கடத்த படும் வரை ஓட்டுனரும் நடத்துனரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள், மேலும் பேருந்து பேருந்து நிலையத்திலிருந்து வெளியே செல்லும் வரை யாரும் பார்கவில்லையா?பேருந்து நிலையத்திலிருக்கும் பேருந்துகளுக்கு யார் பொருப்பு? ( அப்பு பேருந்து எல்லாம் எங்க வரி பணம் கொஞ்சம் சூதானமா பாத்துகொங்கப்பு) அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் தங்கள் கடமையை சரிவர செய்கிறார்களா? ( வாங்கும் சம்பளத்திற்க்கு ) உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பாமரன் கேள்விகள்"

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)