Bee Icons v4.0.3.0



நம்ம Computerல் இருக்கும் default icons பார்த்து பார்த்து புளிச்சிபோன நம் கண்களுக்கு விருந்தாக வந்திருப்பதுதான் Bee Icons. இதை பற்றி நான் ரொம்ப சொல்ல போவதில்லை நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க !!!! Download பண்ண இங்க கிளிக்குங்கோ!!!
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

TuneUp Utilities 2008 7.0.7992




இது எதுக்குனாக்கா உங்க பொட்டி ரொம்ப மெர்சலா இருந்தாக்க அத்த சரிபண்றதுக்கு, இத்த உங்க பொட்டில போட இங்க கிளிக் பண்ணுங்கோ !!!!!
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

Xilisoft DVD Ripper Platinum 4.0.96.0104


இந்த மென்பொருள் உங்க DVDல் உள்ள படங்களை உங்களின் கைபேசிக்கு மாற்ற உதவும். புரியுதா.
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தேசிய தொலைக்காட்சியில் குடியரசு கூத்து


முதலில் அனைவருக்கும் எனது இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன். இன்று காலை சென்னையில் நடந்த குடியரசு தின அணிவகுப்பு மற்றும் கொடியேற்றத்தை பொதிகையில் (D.D) நேரலையில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். அந்த கொடுமையை நானும் காண நேரிட்டது. வர்ணனையாளர்கள் சொல்வதற்க்கும் காமிராவில் காட்டப்படும் நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பே இல்லை, மேலும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் உள்ள வர்ணனையும் ஒளிபரப்பு நிலையதில் உள்ள வர்ணனையும் சேர்த்தே ஒளிபரப்பபட்டது மிகவும் பொருத்தமாய் இருந்தது சந்தைகடை போல் , கேமரா ஒருங்கினைப்பு சுத்தமாக சரியில்லை, ஆளுனர் பற்றி கூறிக்கொண்டிருக்கும் போது கேமரா ஒரு இளம் பெண்னை காட்டி கொண்டிருந்து அருமையிலும் அருமை, வர்ணனையாளர்கள் திக்கி திணறி நா குழறி வர்ணனை கொடுத்த விதம் சொல்லி மாளாது, உ.தா ( மாடத்திற்க்கு மடம் என்று கூறியது, இன்னும் நிறைய இருக்கிறது). நிலைய இயக்குனர் என்னத்தான் செய்து கொண்டிருந்தார். நேரலையில் தவறுகள் நிகழ்வது இயல்பே ஆனால் இத்தகைய கீழ்மட்ட தவறுகள் கலக்கத்தைதான் எற்ப்படுத்துகிறது. தனியார் தொலைகாட்சிகள் தமிழை கொலை செய்தாலும் தொழிற்நுட்ப்பத்துறையில் ஓங்கித்தான் நிற்கின்றன மேலும் தனியார் தொலைகாட்சியில் நிகழ்ச்சியின் தரம் சரிபார்க்க வேண்டியுள்ளது ஏனெனில் அது வருவாயை அதிகரிக்கும் பொதிகையில் வருவாயும் தேவையில்லை நிகழ்ச்சியின் தரம் குறித்து கேட்கவும் நாதியில்லை ( 1 தேதி சம்பளம் ( மத்திய அரசு பணி சகாயங்கள் அதிகம். வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும்) . பாரம்பரியமும் பண்பாடும் நடுநிலை செய்திகளும் கொண்ட பொதிகையி(D.D)லா இவ்வளவு குறைபாடுகள் ??? மற்ற நிகழ்ச்சி என்றாலும் பரவாயில்லை குடியரசு தின விழா சாமி இது.. இப்படி பண்ணாக்க எப்படி?? உங்கள நம்பி DTH வாங்கி இருக்கும் மக்களுக்கு இது தான் நீங்க தரும் பரிசா??? இல்லை தனியார் தொலைக்காட்சிகளை வளர்க்க மறைமுக திட்டமா ?? நிலைய இயக்குனரே காதில் விழுகுதா ??? நீங்க வாங்கும் சம்பளம் எங்களோட வரிபணம் சாமி. வாங்குற சம்பளம் செரிக்கணும் ஆமா.
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

Mission Impossible III (java)


பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் .
RAR கோப்பின் கடவுச்சொல் creep.ru
The password to open the Rar file is creep.ru
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

50 Java Games (S60 / N70 / N90)



பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

எனது 100வது பதிவு


மக்களே, தாய்மார்களே பெரியோர்களே சிறுவர்களே, சிறுவர் பெயரில் பதிவு போடும் பெரியோர்களே, குசும்பர்களே, மங்களூர்காரர்களே, தமிழ்ச்சிகளே, மற்றும் பிற சகபதிவர்களே உங்களுக்கு முதற்க்கண் எனது வணக்கத்தை காணிக்கை யாக்குகிறேன்.
இது எனது 106 வது பதிப்பு ( 100 பதிப்பு முடிந்து போய் சில நாட்கள் ஆகிவிட்டன ) கொஞ்சம் தாமதமாகத்தான் கொண்டாடுகிறேன். இத்தருனத்தில் எனது வலை பூ நிறுவுவதில் பங்கு வகித்த நண்பர் P.K.P அவர்களுக்கு நன்றி கூற நான் கடமைபட்டிருக்கிறேன். மேலும் 106 பதிவிற்க்கு மொத்தம் 3 பின்னூட்டம் இட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. அயிரம் கை மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை போல் dailycoffe தொடர்ந்து நடைபெற உங்களின் ஆதரவை என்றும் நாடும் இளைய கவி
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

Smart movie for Nokia Mobile Phones




பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

Nokia 3250, N80, N91, N93, N95 (Symbian OS 9.1) ந் தீம்கள்


பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

K800/K850 - Springtime தீம்


பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

Symbian 9.1 க்கான தீம்கள்


பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சோனிஎரிக்சன் கைபேசியின் தீம்

Sony Ericsson K600, K610, K750, K800, W600, W700, W800, W810, Z550, Z610 ன் தீம் களை பதிவிறக்கம் செய்ய
கீழே சொடுக்கவும்

சோனி எரிக்சன் தீம்கள் உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

குழந்தைகளின் கொலை !!!

நேற்று மதியம் என் வீட்டிற்க்கு பக்கத்து வீட்டு குழந்தை விளையாட வந்த்து, அக்குழந்தை என் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தவிதம் மிகுந்த ஆச்சர்யத்தையும் வேதனையும் அளித்தது. அவர்கள் வீட்டில் துணி துவைக்கும் ஒரு அம்மாவை ( அக்குழந்தையின் அம்மா வயதொத்தவர்கள்) நி, வா, போ, அவள், இவள், என்று ஒருமையில் பேசியது அக்குழந்தை. மேலும் இது குறித்து அக்குழந்தையிடம் அறிவுரை கூறியபோது அவள் வெறும் வண்ணாத்தி தான் மாமா அதுனால அப்படி சொல்றது தப்பில்லை எங்க மம்மி டாடி கூட அப்படிதான் சொல்றாங்க என்றது. திகைத்து போனேன், பெற்றோர்கள் மனிதர்களை மனிதர்களாக மதிக்க சொல்லிதருவதில்லை, மேலும் சிறுவயது முதலே அப்பிஞ்சு மனதில் ஜாதி வேற்றுமையை விதைக்கிறார்கள், மேலும் விஜய் டி.வி யில் வரும் நீயா நானா ? நிகழ்ச்சியில் ஒரு அம்மணி தன் வீட்டு காப்பாளரை அவன் இவன் என ஒரு media வில் விளித்தது மேலும் அதிர்ச்சிக்குள்ளக்கியது. அந்த அம்மணிக்கு ஒரு சிறு கேள்வி " நீ எல்லாம் இவ்வளவு படிச்சு வேலைக்கு போய் என்ன பிரயோஜனம் ? மனுசன மனுசனா மதிக்க தெரியல நீ எப்படி நல்ல தாயா நல்ல மனைவியா நல்ல குடிமகளா இருக்க போற தாயி ??" இந்த சமுகத்திற்க்கும் ஒரு சவுக்கடி குடுக்க வேண்டும். கீழ்மட்ட தொழில் செய்பவர்களான இப்பெருங்குடி மக்கள் இல்லாவிட்டால் நாறி விடுவீற்கள் நாறி! அதுக்காக தானட இன்னும் அவர்களை வளர விடாம வச்சிருக்கீங்க மெத்த படிச்ச மேதாவிகளா. தலைப்புக்கும் பதிவிக்கும் என்ன சம்மந்தம் என்று ஆராய்வதை விட்டுட்டு உங்களையும் உங்க வீட்டு குழந்தைகளையிம் check பண்ணுங்க சாமி. சிறு துளி பெருவெள்ளம் சாமி. உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

திருமணத்தில் தாலி தேவையா???

அவ்வப்போது என் சிறு மண்டையிலும் யோசனை உதிப்பதுண்டு.
அவ்வாறு நான் யோசித்தவை சில

1) திருமணம் முடிந்தால் தான் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழமுடியுமா ?

2) திருமணம் என்ணும் சமுக அங்கீகாரம் அவசியமா ?

3) திருமணம் ஆடம்பரமாகத்தான் செய்யவேண்டுமா ?

4) நண்பர்களாகவே வாழ்ந்து கொண்டு குடித்தனம் செய்தல் குற்றமா ?

5) புகுந்த வீட்டிற்க்கு வந்த உடன் மணப்பெண் தன் பழக்கவழக்கங்களை மாற்றித்தான் ஆக வேண்டுமா ? ஆம் என்றால் ஏன் ??

6) தாலி கட்டுதல் பெண்ணடிமைத்தனமா ?

7) திருமணமான பின் மற்றொருவர் மீது பெண்களோ அல்லது ஆண்களோ காதல் கொள்ளளாமா?

8) உடலுறவின் போது பெண்கள் தங்கள் fantacy மற்றும் தேவைகளை தன் கணவனிடம் நேரடியாக தெரியபடுத்தலாமா?


மேற்கண்டவை குறித்து என்னால் ஒரு தீர்மானத்திற்க்கு வரமுடியவில்லை, ஆகவே தான் உங்கள் முன் வைக்கீறேன். தங்களின் கருத்துக்களை எதிர் நோக்குகிறேன் உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

http://pamaran.wordpress.com/

பள்ளிக்கூட சுவர் ஒன்றில்….“குழந்தைகளின் வருமானம்பெற்றோருக்கு அவமானம்”“சிறுவன் சுமக்கும் செங்கல்நாட்டு முன்னேற்றத்தின் தடைக்கல்”போன்ற ஆபாச வாசகங்களைக் கண்டு எரியக்கூடாத இடத்தில் எரிச்சல் வந்தது.ஆத்தாக்காரி அங்கயும்…இங்கயும்…கடன ஒடன வாங்கிகாய்கறிக்கடை வெச்சா….உள்நாட்டு பெருமுதலைகளக் கூட்டீட்டு வந்து….“நீயும் கடை வை” ங்குது கவர்மெண்ட்டு.அப்பன்காரன் ஆத்தா தாலிய அடகு வெச்சுபெட்டிக்கடையாவது வெச்சுப் பொழைக்கலாம்ன்னு பார்த்தா…வெளிநாட்டு மொதலாளிகளக் கூட்டீட்டு வந்து“நீயும் வையு”ங்குது அதே கவர்மெண்ட்டு….இந்த லட்சணத்தில்அதுக பெத்த புள்ளைகசெங்கல் சூளைக்கு வேலைக்குப் போகாமசிலிக்கான் சிட்டிக்கா வேலைக்குப் போகும்?அடச்சீ.


ஐயா இப்பவாது யோசிங்க !!! உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பிணம் தின்னும் மனிதர்கள்.








நேற்று நடிகர் பாண்டியனின் உடல் பொது மக்கள் பார்வைக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்ததை ஒரு தனியார் தொலைகாட்சியில் காண நேரிட்டது, ஒரு அரசியல் கட்சியின் சார்பாக மலர்வளையம் கூட வைக்கப்பட்டது, இதில் தான் ஏற்ப்பட்டது போட்டா போட்டி யார் புகை படத்திற்க்கு முன் நிற்ப்பதென்று மேலும் அவர்கள் நடந்து கொண்டவிதம் அந்த சூழ்நிலைக்கு பொருத்தமானதாக இல்லை. சாவு வீட்டிலும் சகாயம் தேடி கொள்ளும் இவைகளை மக்கள் என்பதா? அல்லது மாக்கள் என்பதா?
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சரஸ்வதியை கற்ப்பழிப்போர்.

சரஸ்வதியை கற்ப்பழிப்போர்.

கல்வி கடவுள் சரஸ்வதியை கற்ப்பழிப்போர் இன்று கற்பழிப்போர் ஏராளம். இன்னும் புரியலையா ? கல்வி கட்டணமாக்கப்பட்டதை குறித்து இந்த பதிவு.
இன்றி கல்வி மேல்த்தட்டு மேலும் மேல் நடுத்தர வர்க்கத்திற்க்கு மட்டுமே கிடைக்ககூடிய ஒரு பொருளாக மாறிவிட்டது. ஏன் ?

1) மேற்க்கத்திய கலாச்சாரம்.
2) தனி நபர் வருமானம் அதிகரிப்பு.
3) ஆங்கில மோகம்.
4) சமுக அந்தஸ்து கருதி.
5) பிள்ளைகளின் எதிர்காலம் கருதி.
இன்னும் எத்தனையோ !!!

இதனால் தான் இன்று கல்வி தொழிலாய் மாறிவிட்டது. சுமக்க முடியாமல் புத்தகம் கொண்டு சென்றாலும் படிக்க முடியவில்லை.காரணம் புரிந்து சொல்லி தரும்சூழல் இல்லை. பணம் மட்டுமே குறியாக கொண்டு பிழைப்பு நடத்தும் இந்த கொள்ளையர்களுக்கு பிஞ்சுகளின் மனம் பற்றி அக்கறை என்ன?

அரசு பள்ளிகளையும் பார்போம்.

1) சுகாதரமான சுழ்ந்திலை இல்லாதிருத்தல்
2) போதிய ஆசிரியர் இல்லாதிருத்தல்
3) பணிக்கு வந்தாலும் பணி செய்யாத ஆசிரியர்கள்.
3) போதிய இட மற்றும் இருக்கை வசதி இல்லாமை.
4) தனியார் பள்ளிகளை போன்ற சோதனை கூடம், விளையாட்டு மைதானம், மற்றும் திறனறிவு போட்டிகள் இல்லாதிருத்தல்.

ஒன்று மட்டும் நிச்சயம் இந்த கல்வி விற்க்கும் தொழில் தொடங்கியதற்க்கு நாமும் ஒரு காரணம் தான்.



இவ்வாறு இருபக்கமும் குறைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது ஆனால் இதற்க்கு முடிவு என்ன ?? நீங்களே சொல்லுங்கள் ..... உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இளையகவின் இனிய பொங்கல் நல்வாழ்த்து



அன்பு நண்பர்களுக்கும், தமிழச்சி, P.K.P, வசந்தம் ரவி, இலவச கொத்தனார், மங்களுர் சிவா, ஓசை செல்லா, மற்றும் நான் அறியாத சகபதிவர்களுக்கும் என் சிரந்தாழ்ந்த பணிவான பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
இளையகவி
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

CVR ன் புகைபட போட்டிக்கு என் படங்கள் 2007

உனக்காக நான் விழித்திருப்பேன் நிம்மதியாய் நீ தூங்கு.

வாழ்கை என்னும் இருட்டில் தன்னம்பிக்கை ஒளியை ஏந்தி

இருட்டான என்ன பகலானா என்ன எனக்கு தேவை பால்.


யோவ் இளையகவி இது தான் சூரியனா ?

இவை யாவும் என்னால் சோதனை முயற்ச்சியாக எடுக்கப்பட்ட புகை படங்கள் ஆகும். என்னிடம் புகைபட கருவி இல்லாததால் கைபேசி முலம் எடுக்கப்பட்ட புகைபடங்களை பதிவு செய்திருக்கிறேன். குறைந்த தரத்திற்க்காக மன்னிக்கவும்.


உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஆறாம் அறிவுக்கான வலை பூ

இது ஒரு கருத்து மோதலுக்காண களம், தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் களம். தாங்களின் கருத்துகளையும் விவாதங்களையும் மேடையேற்றி தீர்வுகாணும் வலைமேடை. தங்களை அன்போடு அழைக்கிறேன். இதில் தனிமனித துதியொ அல்லது தாக்குதலோ வேண்டாமே !

ஆறாம் அறிவுக்கான வலை பூ

பங்கேற்க்க அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

என்றும் அன்புடன்

இளையகவி உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாம் தொலைத்த விளையாட்டுக்கள் குறித்து





இப்போதுள்ள சிறுவர்களுக்கு விளையாடக்கிடைக்கும் X-BOX, Playstation, GameBoy இவற்றையெல்லாம் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த நவீன விளையாட்டு சாதனங்களை இந்தத் தலைமுறை சிறுவர்கள் கையாளும் லாவகம் பிரமிக்க வைக்கிறது. அதே போல் நமது சிறுவயதில் நமக்கு நமது சிறு வயதில் என்ன விளையாடக்கிடைத்தது என்றும் ஆதங்கப்படவும் வைக்கிறது.

ஒளிந்து பிடித்து விளையாடுதல் :-
'சாட் பூட் த்ரீ' என்று சொல்லி ஓவ்வொருவராக விலக்கிவிட்டு கடைசியில் யார் இருக்கிறார்களோ அவர்கள் ஒன்றிலிருந்து பத்துவரை கண்ணை மூடிக்கொண்டு எண்ணவேண்டும். அதற்குள் மற்றவர்கள் ஒளிந்து கொள்ளவேண்டும். பின்பு ஒளிந்து கொண்டவர்களை ஒவ்வொருவராக கண்டு பிடிக்க வேண்டும். ஒளிந்திருப்பவரை ஒவ்வொருவராக கண்டு பிடித்தவுடன் 'ஒன்னீஸ்' 'ரெண்டீஸ்' :-) என்று சொல்லுவார்கள். இந்த விளையாட்டின் பெயரே ஒன்னீஸ் ரெண்டீஸ் என்று சொல்லுவது உண்டு. அனைவரும் கண்டு பிடிக்கப்பட்ட பின் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டவர் பின்பு தொடர வேண்டும். இப்படி போய்கொண்டே இருக்கும்.

பம்பர விளையாட்டு :-
பம்பர விளையாட்டு மிகவும் பிரசித்தமானது, 1,2,3 சொல்லிவிட்டு எல்லோரும் ஒரே சமயத்தில் பம்பரத்தை சுழலவிட்டுவிட்டு சாட்டையால் சுற்றி கையில் எடுக்க வேண்டும். யார் கடைசில் எடுக்கிறார்களோ அவர்களது பம்பரத்தை மண் தரையில் ஒரு வட்டம் போட்டுவிட்டு அதன் உள்ளே இடுவார்கள். அப்புறம் ஒவ்வொருவராக பம்பரத்தை வேகமாக சுழற்றி முதலில் அந்த வட்டத்துக்குள் குத்துமாறு சுழலவிடவேண்டும். வட்டத்துக்குள் குத்தாவிட்டால் அவரது பம்பரமும் வட்டத்துக்குள் வைக்கப்படும். இது ஒரு சுவாரசியமான ஆட்டம். ஆட்டத்தின் முடிவில் தோற்பவரின் பம்பரத்தின் மேல் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஒரு 'ஆக்கர்'(பம்பரத்தின் மேல் ஆணியை வைத்து புள்ளி விழுமாறு ஓங்கி அடிப்பார்கள்) வைப்பார்கள். சில சமயங்களில் பம்பரம் உடைவது கூட உண்டு. சிலசமயம் பெண்களை கவர, பம்பரத்தை சுழற்றி தரையில் படாமலே கையில் எடுப்பதுவும் உண்டு.


கோலி விளையாட்டு :-
சுவற்றின் ஓரத்தில் ஒரு சதுரமாக ஒரு கோடு போட்டுவிட்டு அதற்குள் சில கோலிகளை உருட்டுவார்கள். அதற்குப்பிறகு எதிராளி சொல்லும் கோலியை எறிந்து அடிக்க வேண்டும். இதற்கு சிகரெட் அட்டை, கோலி குண்டு இவற்றை பணயமாக வைத்து ஆடுவது உண்டு. கோலிகுண்டு சிலசமயம் சிலர் பணம் வைத்து ஆடுவதால், வீட்டார்கள் அதை பெரும்பாலும் விளையாட அனுமதிப்பதில்லை.


கிட்டிப்புல்(கில்லி) :-
மிகவும் பிரபலமான ஆட்டம். ஆனால் பல இடங்களில் இதை விளையாடவிட மாட்டார்கள். எனக்கு தெரிந்து நிறைய பேருக்கு கில்லி விளையாட்டால் காயம் ஏற்பட்டிருக்கிறது. ஆட்டம் மிகவும் சுவாரசியமானது. தரையில் நீளவாக்கில் தோண்டிவிட்டு கிட்டிப்புல்லை அதற்கு குறுக்கில் வைக்க வேண்டும், பிறகு கையில் இருக்கும் கோலால் , கிட்டிப்புல்லை வேகமாக அழுத்தம் கொடுத்து நெம்பித் தள்ள வேண்டும். எதிராளிகள் அந்தப்புறம் நின்று கொண்டு இருப்பார்கள். அவர்கள் இதை கீழே விழாமல் பிடித்துவிட்டால் நீங்கள் அவுட்.. பின்பு அவர்கள் முறை. பிடிக்காமல் தூரத்தில் போய் விழுந்தால், நீங்கள் கோலை குறுக்காக வைக்கவேண்டும் .பின்பு அவர்கள் கிட்டிபுல்லை தூக்கி குறி பார்த்து எறிந்து அது கோலில் பட்டால் நீங்கள் அவுட். அவர்கள் எறியும் போது அது கோலில் படாமல் தூரத்தில் போய் விழுந்தால் நீங்கள் ஆட்டத்தை தொடரலாம். ஆட்டம் எப்படியென்றால், நீங்கள் கிட்டிப்புல்லின் சீவியிருக்கும் ஒரு முனையில் அடிக்க வேண்டும், அது எம்பி வரும்போது அதை கோலால் எத்தனை முறை தட்ட முடியுமோ அவ்வளவு புள்ளிகள். அப்படி தட்டிக்கொண்டே குழியிலிருந்து எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் கொண்டு செல்ல வேண்டும். ஒரு முறை கூட தட்ட முடியாவிட்டால் அங்கிருந்து குழி இருக்கும் தூரத்தை கையிலிருக்கும் கோலால் அளக்க வேண்டும் எவ்வளவு தூரம் இருக்கிறதோ அவ்வளவு புள்ளிகள். இப்படியே நீங்கள் அவுட் ஆகும் வரை ஆட்டம் தொடரும். ஒரு தெருவில் ஆடும் ஆட்டம் அப்படியே பக்கத்து தெருவிற்கும் போவது உண்டு.


பே பே :-
பள்ளியில் இடைவேளைகளில், சோளத்தட்டையால் எறி பந்து விளையாடுவது உண்டு.


செதுக்கல் :-
புளியங்கொட்டையை ஒரு வட்டத்திற்குள் கொட்டிவிட்டு அதை தட்டையான கல்லால் செதுக்கி வெளியே கொண்டு வந்து விளையாடும் 'செதுக்கு சில்' ரொம்ப பிரபலம்.


பட்டம் விடுதல் :-
ஊருக்கு ஒதுக்குப்புறத்திற்கு சென்று மாஞ்சா தடவி பட்டம் விடுதல் ரொம்ப பிரபலம். பட்டம் விடுவது ஒரு பெரிய கலையாகும். இதில் முக்கியமான ஒன்று சூச்சம் போடுதல் ( இதில் 2 வகை உண்டு மேல் முடிச்சு கீழ் முடிச்சு) இன்னும் நிறைய எழுதலாம் தொடர நினைப்பவர்கள் பின்னுட்டம் இடவும்.


பெண்கள் விளையாட்டு :-
பெண்களெல்லாம் கண்கட்டு விளையாட்டு, பரமபதம், நொண்டி , சொட்டாங்கல்( இது மிகவும் பிரபலமான விளையாட்டு), பல்லாங்குழி இவையெல்லாம் விளையாடுவது உண்டு.


கிச்சு கிச்சு தாம்பளம் :-
நல்ல மணல் விளையாடக்கிடைத்தால் மணலை நீளவாக்கில் குவித்துவிட்டு எதிரெதிராக உட்கார்ந்து கொண்டு சிறு கல்லை அதற்குள் ஒளித்து வைத்து எதிரில் இருப்பவர் அது எங்கிருக்கிறது என்பதி அனுமானித்து அதன் மேல் இருகைகளை வைத்து மூடவேண்டும். சரியாக கணித்தால் பின்பு அடுத்தவர் முறை.


பச்சகுதிர விளையாட்டு :-
முதல்ல ஒருத்தர் தரையிலே கால் நீட்டி உட்காந்து அவரை எல்லோரும் தாண்டனும்.. அப்புறம், ஒரு கையை வப்பார், அதையும் தாண்டீட்டா ரெண்டு கையையும் வப்பார், அப்புறம் எழுத்து குனிஞ்சு நிக்கையிலே தாண்டனும், அப்படியே கொஞ்சம் கொஞ்சமா தாண்டனும்.. எப்பயாவது தாண்டையிலே இடிச்சிட்டா.. அப்புறம் இடிச்சவங்க உட்காற.. அப்படியே வெளையாட்டு தொடரும்..


மேலே சொல்லாமல் விடுபட்டுப்போன எவ்வளவோ விளையாட்டுக்கள் இருக்கின்றன. இப்போது இருக்கும் சிறுவர்களுக்கு இவைபற்றியெல்லாம் எந்த அளவுக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. கிராமங்களில் இவை இன்னும் உயிருடன் இருக்கின்றன என்று நம்புகிறேன். ஆனால் ஒன்று மட்டும் உண்மை இதை பற்றி எழுதும்போதே மனதுக்குள் மெல்லிதான ஒரு ஆனந்தம் பரவுவதை உணர முடிகிறது...
சில தகவல்கள் கீழிருந்து உருவப்பட்டது . ( 4 பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல டொன்ட டொன்ட டொன்ட டொய்ன். )
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாம் தொலைத்த விளையாட்டுக்கள் - பரமபதம்


பரமபதம் (ஏணியும் பாம்பும்) ஒரு பாரம்பரிய பலகை விளையாட்டு. இரண்டுக்கு மேற்பட்டோர் விளையாடும் இவ்விளையாட்டில் பலகை சதுரக் கட்டங்களைக் கொண்டதாக இருக்கும். பொதுவாக 8*8, 1-0*10, 12*12 எண்ணிக்கையில் சதுரக் கட்டங்கள் இருக்கும். சில கட்டங்களை ஏணிகளும் பாம்புகளும் இணைக்கும். ஏணிகள், பாம்புகளின் எண்ணிக்கை, அமைப்புபோன்றவையும் பலகைக்குப் பலகை வேறுபடலாம். இவ் விளையாட்டு பண்டைய இந்தியாவில் கி.மு இரண்டாம் நூற்றாண்டளவில் விளையாடப்பட்டது. 1892 அளவில் இங்கிலாந்தில் அறிமுகமானது. இவ்விளையாட்டு நல்வினைகளதும் தீவினைகளதும் பெறுபேறுகளைக் குழந்தைகளுக்கு விளக்குவதாக அறிமுகஞ் செய்யப்பட்டிருக்கலாம்.வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுவதும் கண்விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பாண்மையான வைணவர்கள் விடியும் வரை விளையாடுவர். பாவம் செய்பவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும் புண்ணியம் செயதால் திருமாலின் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் பொருட்டு இவ்விளையாட்டு அன்று வைணவர்களால் விளையாடப்படுகின்றது.தாயக்கட்டையை உருட்டுவதன் மூலம் காய்களை நகர்த்துவதாக இவ்விளையாட்டு அமைகிறது. இரண்டு முதல் பலர் விளையாடலாம். இதனை விளையாட சிறப்புத் தேர்ச்சிகள் எதுவும் வேண்டியதில்லை. பொதுவாக தொடங்குவதற்கு ஒருவர் "1" இனைத் தாயக்கட்டையில் பெற வேண்டியிருக்கும். பின்னர் மாறிமாறித் தாயக்கட்டைகளை உருட்டிக் கிடைக்கும் எண்ணிக்கைகேற்ப காய் நகர்த்தப்படும். ஏணியின் அடியை அடையும் காய் ஏணியின் உச்சிக்கும் பாம்பின் வாயை அடையும் காய் பாம்பின் வாலுக்கும் செல்லும். இந்தத் தடைகளைத் தாண்டி கடைசிக் கட்டத்தை அடையும் காய் வெற்றியடையும்.
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாம் தொலைத்த விளையாட்டுகள் - பல்லாங்குழி


பல்லாங்குழி என்பது மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு சாதனம். அதில் இரு வரிசைகளில் ஏழு குழிகள் இருக்கும். பொதுவாக புளியங்கொட்டையை வைத்து பல்லாங்குழி ஆட்டம் (பாண்டி ஆட்டம்) ஆடப்படுகிறது. எனக்கு தெரிந்து 4 வகை பாண்டி ஆட்டங்கள் இருக்கின்றன.
1. இருவர் மட்டுமே விளையாடும் சாதா பாண்டி
விளையாட்டில் ஈடுபடும் இருவரும் எதிர் எதிராக அமர்ந்து கொள்ள வேண்டும் (இருவருக்கும் தலா 7 குழிகள்). ஒவ்வொரு குழியிலும் 5 காய்கள் (புளிங்கொட்டை அல்லது வேப்பங்கொட்டை) வீதம் மொத்தம் 70 காய்கள் 14 குழிகளிலும் நிரப்பப்பட வேண்டும். முதலில் ஒருவர் விளையாட வேண்டும் அதாவது ஒரு குழியில் இருக்கும் 5 காய்களை பிரித்து வலமாக ஒவ்வொரு குழியிலும் ஒவ்வொன்றாக போட்டுக்கொண்டே செல்ல வேண்டும். 5 குழி முடிந்ததும் 6 குழியில் இருக்கும் காய்களை முன்பு போலவே பிரித்துப் போட வேண்டும். இதே போல பொட்டுக்கொண்டே சென்றால் சில குழிகள் காய்கள் இல்லாமல் காலியாகி விடும். பிரித்து போட்டுக் கொண்டிருக்கும் காய்கள் ஒரு காலியாக இருக்கும் குழிக்கு முன் முடிந்து விட்டால் காலியாக இருக்கும் குழிக்கு அடுத்த குழியிலும் அதற்கு எதிரில் இருக்கும் காய்களை எடுத்துக் கொள்ளலாம். இரணடு காலி குழிகளிற்கு முன் கையிலிருக்கும் காய்கள் முடிந்து போனால் ஆடுபவர் ஒன்றுமில்லாமல் "சும்மா" போக வேண்டும்.அதோடு ஒருவரின் ஆட்டம் முடிந்து விடும். அடுத்தவர் அதைப்போலவே ஆட வேண்டும். ஒருவரின் பங்கிலிருக்கும் 7 குழிகளில் ஏதாவது ஒரு குழியில் 4 காய் வருவது "கண்" என்று அழைக்கப்படும், அதை அந்த பக்கத்திலிருப்பவர் எடுத்துக்கொள்ளலாம். ஆட்டத்தின் முடிவில் நன்றாக விளையாடத் தெரியாதவரிடம் 35 க்கு (< 50%) குறைவான காய்களே இருக்கும். காய்கள் நிரப்பாமல் மீதி இருக்கும் குழிகளில் "பீத்தை" (ஏதாவது குப்பை அல்லது காகிதம்) போட வேண்டும்.பீத்தை குழிகளில் அடுத்தவர் காய் போட்டால் பீத்தை போட்டவர் அந்த காயை "ஊதி" எடுத்துக்கொள்ளலாம் (as bonus). இப்படி விளையாண்டு கொண்டே போனால் ஒருவரிடம் (விளையாடத் தெரியாதவரிடம்) 5 க்கும் (ஒரு குழிக்கும் பற்றாகுறை)குறைவான காய்கள் இருக்கும் நிலை வரலாம். அப்படி வரும் போது "கஞ்சி காய்ச்சுதல்" வேண்டும். "கஞ்சி காய்ச்சுதல்" என்றால் ஒவ்வொரு குழியிலும் ஒவ்வொரு காய் போட்டு முன்பு போலவே விளையாட வேண்டும். சில சமயங்களில் ஒருவர் எல்லா காய்களையும் இழப்பதும் உண்டு. அப்போது வெற்றி பெற்றவர் தோற்றவரைப் பார்த்து "தோத்தாந்துள்ளி....." பாடலாம்
இது போல 3 பேர் விளையாடும் மிகவும் விரு விருப்பான "ராஜா பாண்டி", ஒருவர் மட்டுமே முடிவே இல்லாமல் விளையாடும் "சீதா பாண்டி" (சீதை அசோக வனத்தில் இருக்கும்போது விளையாடியதாம்), நிறைய காய்கள் வைத்து விளையாடும் "காசி பாண்டி" (இது என்க்கு சுத்தமாக மறந்து போய்விட்டது). இது நான்கும் நான் அறிந்தவை. யாருக்காவது தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாளை அல்லது வேரொரு நாள் சொல்கிறேன்....அல்லது வேறு யாராவது இவற்றை இங்கே பதிவு செய்தாலும் மிக நன்று.
இதையன்றி உங்கள் ஊர்ப் பகுதிகளில் விளையாடப்படும் வேறு வகையான பாண்டி ஆட்டம் ஏதாவது இருந்தாலும் இங்கே பதிவு செய்யுங்கள்.
இது மிகப் பழைமையான விளையாட்டு....ஒரு காலத்தில் தங்க பல்லாங்குழியும் முத்துக்களும் வைத்து பாண்டி ஆட்டம் ஆடியதாக எங்கோ படித்திருக்கிறேன்.....
உபயம் :- விக்கிபீடியா.
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

எங்கள் ஊர் பொருட்காட்சி
















உங்களது பள்ளி பருவத்தை நினைவுக்கு கொண்டுவரும் பொருட்காட்சியின் ஒரு சில படங்கள். ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்










உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

(A) வயது வந்தவர்களுக்கு மட்டும். how to unhook a bra!!!!

நான் ரொம்ப சின்ன பையன் அதுனால நான் பாக்கலை

உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நான் ரசித்ததில் சில உங்களுக்காக

உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வாங்குனா Sony Laptapthan

கொஞ்சம் குசும்புதான்

உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

B.Ed வாங்கலையோ சாமி B.Ed. சுலபதவனை சாமி


கல்வியை சுலபதவனையில் தருகிறார்களாம் .. தாங்களும் தங்களின் கருத்தை தரலாமே !!!
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

Online Diary

அந்த காலத்தில் இருந்த டைரி எழுதும் பழக்கம் இன்றைய டிஜிட்டல் மீடியாக்களால் வெகுவாக குறைந்து விட்டது. முள்ளை முள்ளால் எடுப்பது போல் இன்றைய டிஜிட்டல் மீடியாக்களால் அழிந்த டைரி மீண்டும் இணையவடிவில் உஙகளுக்காக. Log in பண்ணுங்க N'Joy பண்ணுங்க.

குறிப்பு :-
இந்த சேவை ஒரு இலவச சேவையே அதனால் உங்கள் பதிவுகள் எவ்வளவு தூரம் பாதுகாக்க படும் என்பதை முன்னால் தெரிந்து கொள்ளவும்.



இணையத்தில் privacy சுட்டியை சொடுக்கிய போது கீழ் கண்ட தகவல் தரப்பட்டது.

This is a free service for anyone who wants to keep an online diary, and is designed to be fast and easy to use. You won't seee much complicated design and heavy graphics here.
On the Internet, information is everything. Privacy is essential. I will not rent, sell or share your email-address or the information you give me with anyone.
If you decide to make your diary public, be very careful what personal information you put in it (eg. mail-adress, name, address). There are lots of weird people out there. Trust me.
I try to have this site as secure as possible, and if you discover any problems, please contact me.
The backup-facilities for this service is limited, so if Bad Things happen, I might not have everything stored. உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

Latest Computing


இன்று நம்முடைய வாழ்கையும் இவ்வாறு தான் மாறிவிட்டது....
இதெல்லாம் P.K.P அண்ணாச்சிக்குதான் வெளிச்சம்.
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

விடுமுறையை கொண்டாடுங்கள்

ஹும் எனக்கும் எரோபிளேனில் போகனும் போல இருக்கு... யாரவது துனைக்கு வாரீங்களா சாமி

உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அம்மாவும் மனைவியும்

புத்தாண்டு முடிந்தது ஒரு வழியாக . இந்த வருடமாவது நாம் சற்று குளோபல் வார்மிங் பற்றி சிந்திப்போம், மேலும் மனிதன் தன் சக மனிதர்களை மரியாதையுடனும் பாசத்துடனும் ந்டத்தவும் மனிதநேயம் வளரவும் இறைவனை பிராத்தனை செய்வதுடன் நாமும் சிறிது முயற்ச்சி செய்வோம். விஜய் டிவியில் நீயா நான பார்க்கும் போது ஏற்ப்பட்ட சிந்தனை இது. அதில் ஒரு அம்மணி பேசியது என்னை ரொம்ப சிந்திக்க வைத்தது. திருமணத்திற்க்கு பின் ஒரு பெண் புகுந்த வீட்டிற்க்காக தன்னை எவ்வாறு எல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டி உள்ளது. அம்மாடி நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது. நாம் இன்னும் ஆணாதிக்க சமுதாயத்தில் உள்ளோமோ என நினைக்க தோன்றுகிறது. அம்மாவும் மனைவியும் தியாகிகள் தான் ( ஒரு சில ) உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS