காவல் துறைக்கு ஒரு கடிதம்.

அனுப்புனர்,
திரு.பாமரன்,
தெக்கனாம்பட்டி

பெருனர்,
காவல் துறை அதிகாரிகள் அனைவரும்( ஒரு சில அதிகாரிகள் தவிர ) சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் துறை.


பொருள் :- பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டி விண்ணப்பம்.


மதிப்பிற்குரிய ஐயாக்களே, (தங்களை அவ்வாறுதான் அழைக்க அறிவுறுத்த படுகிறார்கள் மக்கள் தங்கள் அள்ளகைகளால்)

தாங்கள் மிகப்பெரிய பொருப்பில் இருக்கும் அதிகாரிதான், உங்களின் ஆளுமையை காவல் நிலையத்திற்க்குவரும் அப்பாவிகளிடமா காட்ட வேண்டும். ஆய்வாளர்களையும் உதவி ஆய்வாளர்களையும் சந்திப்பது என்பது மிக கொடுமையானது. புகார் கொடுப்பவரையே
குற்றவாளி போல் நடத்துவது, புகார் கொடுக்கப்பட்டது பெரிய தலைகள் மேல் என்றால் சம்பந்தப்ட்ட நபரிடம் கையூட்டு ( லஞ்சம்)பெற்று கொண்டு கட்ட பஞ்சாயத்து வேறு. காவல் நிலையத்தில் உள்ள அனைவருக்கும் கையூட்டு கொடுக்க வேண்டியுள்ளது
என் மேல் எந்த குற்றமோ அல்லது புகாரோ இல்லை என நீங்கள் உறுதியளிக்க, கையூட்டு கொடுப்பதே குற்றம் தானே ?? இந்த கொடுமை இப்படி என்றால்.

போக்குவரத்து காவல் துறை இதை விட மோசம்.அப்பாவிகளை பிடித்து அபராதம் விதிப்பது, ஆணுக்கொரு சட்டம் பெண்ணுக்கொரு சட்டம்என செயல்படுவது. ஆண் 3 பேரை வண்டியில் எற்றி செல்லுதல் குற்றம் பெண் 3 பேரை வண்டியில் எற்றி செல்லுதல் குற்றம் இல்லை.
எந்த பெண்ணிடமாவது வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளதா என சோதித்து பார்பீர்களா? அல்லது பார்த்திருப்பீற்களா ? உங்களிடம் மாட்டும் ஆண்களின் வேதனை சொல்லி மாளாது, பொது இடம் என்று கூட பாராமல் அவர்களை நீங்கள் படுத்தும் பாடு, நீங்கள் அவர்களிடம் பேசும் தகாத வார்தைகள், அவர்களை கொஞ்சம் கூட இறக்கம் இல்லாமல் கெஞ்சவைப்பது, இத்தனையும் ஒரு பெண்ணிடம் செய்ங்களேண்.அட இவை அத்தனையும் சட்டதை நிலை நிறுத்தவா இல்லை நாங்கள் தரும் 50 ரூபாய்க்காக. இவை மட்டுமா ? சாலையோர கடைகள், துரித உணவகங்கள், பூக்கடைகள் பழ கடைகள் இவற்றில் அதிகார வசுல் வேறு. பேருந்துகளில் இலவச பயணம், சீருடை துவைக்கவும், காலணிகள் மற்றும் இடை கச்சைகளை பளபளப்பாக்க
மெழுகு மற்றும் உதவி பணம், இலவசமாக குடும்பத்தோடு நகர்வலம் வர காவல்துறையின் வாகனங்கள் மற்றும் மக்களின் வரிபணம் எரி பொருளாக. வங்கியிலும், அரசு அலுவலங்களிலும் தாங்கள் வரிசையில் கூட நிற்க மாட்டீர்கள்.வாகனத்தில் இருந்து இறங்கி கூட உங்களால் மக்களிடம் பேசவோ அல்லது போக்குவரத்தை சீர் செய்யவோ முடியாது பாவம் தங்களின் கீரிடம் இறங்கிவிடும் என்பதால். தேங்காய் பூ துண்டு போட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டே
நீங்கள் போக்குவரத்தை சரி செய்யும் விதம் சொல்லி முடியாது.


பாமரனின் ஒரே ஒரு ஐயம் என்னவெண்றால் இவ்வளவு செய்த பிறகு மக்கள் நேச காவல்துறை ஏன்ற வாசகம் எதற்காக ??
நீங்களை எங்களை மதிக்க கூட வேண்டாம் மிதிக்காமல் இருந்தால் போதும். தங்களின் ஆணவபோக்கயும் அதிகார துர்பிரோயோகத்யும்
தயவு செய்து விட்டுவிடுங்கள். காவல்துறை மக்கள் நேச காவல்துறையாக மாற இனியாவது முயற்ச்சிப்போம்.


மாற்றம் வரும் என்ற நம்பிக்கையுடன்

பாமரன் உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "காவல் துறைக்கு ஒரு கடிதம்."

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)