சென்னை அய்.அய்.டி.யி இயக்குநரின் கோரத்தாண்டவம்.

அரசின் ஆணைகளைத் தூக்கி எறியும் தர்பார்! சமூகநீதி சக்திகள் ஒன்று திரண்டு போராடுவோம்!

சென்னை அய்.அய்.டி. இயக்குநர் ஆனந்த் என்ற பார்ப்பனர் அரசு விதிமுறைகளைத் தூக்கி எறிந்து,இட ஒதுக்கீடுக்கு எதிராகப் பார்ப்பனர்களையே நியமனம் செய்வது எப்படி?

மொத்தம் 432 ஆசிரியர்களின் எண்ணிக்கையில், ஆறு பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டோர்! இட ஒதுக்கீடு ஆணை எங்கே? எங்கே?

ஓய்வுக்குப் பிறகும் இந்தப் பார்ப்பனர் பதவி நீடிப்பது எப்படி?அதன் மர்மம் என்ன?


சென்னை அய்.அய்.டி. இல் உதவிப் பேராசிரியர் நியமனம் என்ற சாக்கில் விதிமுறைகளின்படி, விளம்பரம் செய்யாமல், இட ஒதுக்கீடு அளிக்காமல் உயர் ஜாதிக்காரர்களையே நியமிக்கும் முயற்சியில் வெகுவேகமாக அதன் இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த் எனும் பார்ப்பனர் எடுத்து வரும் செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அய்ந்து ஆண்டுகளில் ஆனந்த் நியமித்த பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதி ஆசிரியர்கள்



  1. அப்ளைடு மெகானிக்ஸ்- 18 இல் 16 பேர்
  2. பயோடெக்னாலஜி - 23 இல் 21 பேர்
  3. கெமிக்கல் இன்ஜீனியரிங்- 25 இல் 14 பேர்
  4. கெமிஸ்ட்ரி- 33 இல் 23 பேர்
  5. சிவில் என்ஜினீயரிங்- 40 இல் 23 பேர்
  6. கணினிப் பொறியியல் - 20 இல் 13 பேர்
  7. எலெக்ட்ரிகல் என்ஜினீயரிங்- 43 இல் 31 பேர்
  8. பொறியியல் வடிவமைப்பு - 6 இல் 5 பேர்
  9. மானுடம் மற்றும் சமூகவியல்- 25 இல் 15 பேர்
  10. மேலாண்மைக் கல்வி - 16 இல் 11 பேர்
  11. கணிதம் - 26 இல் 19 பேர்
  12. மெகானிகல் என்ஜினீயரிங் - 52 இல் 33 பேர்
  13. மெட்டலர்ஜி பொறியியல்- 25 இல் 17 பேர்
  14. கடல்சார் பொறியியல் - 16 இல் 9 பேர்
  15. இயற்பியல் - 39 இல் 29 பேர்
  16. ஏரோஸ்பேஸ் பொறியியல- 19 இல் 14 பேர்

குறிப்பு: இந்த நியமனங்களில் இட ஒதுக்கீடு அறவே பின்பற்றப்படவில்லை.


மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்லவும் உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சென்னை அய்.அய்.டி.யி இயக்குநரின் கோரத்தாண்டவம்."

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)