வேலை ஏய்ப்பு அலுவலகம் பாரீர் பாரீர்

நேற்று பத்திரிக்கையை புரட்டிக் கொண்டிருக்கையில் கண்ணில் பட்டது ஒரு செய்தி. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய முதல் நாள் இரவிலிருந்தே காத்திருந்திருந்தனர் மாணவமணிகள். படித்தவுடன் வேதனையும்,எரிச்சலும் சேர்ந்தே எழுந்தது.


ஏன் இந்த அவசரம்? அல்பத்தனம்? யாருடைய தவறு? சீனீயாரிட்டி என்ற பெயரில் நடக்கும் இந்த கிறுக்குத்தனத்திற்கு என்றுதான் முடிவு வருமோ? இதற்கு தீர்வுதான் என்ன? என்று தீவிரமாக யோசித்தேன்.


முதலாவதாக மாணவர்கள் பதிவு செய்ய அலுவலகத்திற்கு வர தேவையில்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அரசு பள்ளி,கல்லூரிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை எனவும்,சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளே ஒவ்வொரு வருட முடிவிலும் தங்களுடைய மாணவர்களின் பட்டியலை அனுப்ப வேண்டும். சீனியாரிட்டி என்பது மதிப்பெண்கள் மற்றும் நன்னடத்தை, N.C.C,N.S.S போன்றவற்றில் ஆற்றிய சேவை ஆகியவற்றை பொறுத்தே வகைப்படுத்தப் பட வேண்டும். இதன் மூலமாவது இந்த அவவலம் தீர வேண்டும் என்பதே எனது (இதுவரை எம்ப்ளாய்மெண்ட் ஆபிசில் கால் வைக்காத பையனின்) விருப்பம்.


நன்றி :- வேலு பாரதி




Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

1 Response to "வேலை ஏய்ப்பு அலுவலகம் பாரீர் பாரீர்"

  1. நாமக்கல் சிபி says:

    //முதலாவதாக மாணவர்கள் பதிவு செய்ய அலுவலகத்திற்கு வர தேவையில்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அரசு பள்ளி,கல்லூரிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை எனவும்,சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளே ஒவ்வொரு வருட முடிவிலும் தங்களுடைய மாணவர்களின் பட்டியலை அனுப்ப வேண்டும்//

    குட் பாயிண்ட்!

    அப்புறம் எல்லாரும் அரசு பள்ளிகளிலேயே படிக்கணும்னு வந்துடுவாங்க!

    ஏழை பாழைங்களை கொஞ்சம் நினைச்சிப் பாருங்க! அங்கயாவது அவங்க படிக்கட்டும்!

    பெரிய அளவுல டொனேசன் கொடுத்து படிக்கும் வள்ளல்கள் தனியார் பள்ளியிலேயே படிக்கட்டும்!

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)